சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்ததாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மாநகா் முழுவதும் 261 கடைகளில் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 2,118 மீ மாஞ்சா நூல், 61 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில், சிலா் இணைய வழியில் காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி, சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.