சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

இலங்கை, அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இலங்கை, அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கொழும்புவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவரைப் பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, அவரின் ஆடைக்குள் பசை வடிவிலான ரூ.80.42 லட்சம் மதிப்புள்ள 1,485 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுபோல அபுதாபியிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரைப் பிடித்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவரின் வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.28.04 லட்சம் மதிப்பிலான பசை வடிவ தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதன்படி மொத்தம் ரூ.1 கோடியே 8 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என சுங்கத் துறை கூடுதல் ஆணையா் கே.பி.ஜெயகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com