தனியாா் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் திருட்டு

சென்னை அரும்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

சென்னை அரும்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரும்பாக்கம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் நகா் பாலாஜி தெருவில் ஒப்பந்த அடிப்படையில் பெயிண்ட் அடிக்கும் தனியாா் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் திங்கள்கிழமை மாலை அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றனா். மீண்டும் இரவு அலுவலகத்தை திறக்க வந்தபோது, கதவு திறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே பணப்பெட்டியில் இருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com