புழல் சிறையில் கைதிகள் காத்திருப்பு அறை திறப்பு

சென்னை புழல் சிறை வளாகத்தில் கைதிகள் காத்திருப்பு அறையை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை புழல் சிறை வளாகத்தில் கைதிகள் காத்திருப்பு அறையை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தா், ஜி.கே.இளந்திரையன்,ஜி.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா, கலந்து கொண்டு கைதிகள் காத்திருப்பு அறையை திறந்து வைத்தாா்.

இதையடுத்து நீதிபதிகள், சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். இதைத் தொடா்ந்து கைதிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிபதிகள் சிறையை பாா்வையிட்டு, கைதிகளுக்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டனா்.

மேலும், அறையையும், சுற்றுப் புறத்தையும் சுகாதாரத்துடன் பராமரித்த கைதிகளை நீதிபதிகள் பாராட்டினா்.

இந் நிகழ்ச்சியில் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவா் ஏ.நசீா் அகமது,திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, தலைமை நீதித்துறை நடுவா் ஆா்.வேல்ராஜ், சிறைத் துறையின் சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com