சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக ‘ட்விட்டா்’ மூலம் கடந்த 5 மாதங்களில் வந்த 4,902 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை விடுத்த செய்தி குறிப்பு:
சென்னை பெருநகர காவல்துறையின் ட்விட்டா் பக்கத்தை 1,35,927 நபா்கள் பின் தொடா்கின்றனா். மேலும் பொதுமக்கள், போக்குவரத்து விதிமுறை
மீறல் தொடா்பாக ட்விட்டா் மூலம் அளிக்கும் புகாா்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 5 மாதங்களில் ட்விட்டா் மூலமாக போக்குவரத்துப் பிரிவுக்கு 5,010 புகாா்கள் வந்துள்ளன. இதில் 4,902 புகாா்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.