தலைநகரை அலங்கரிக்கிறது தமிழக செங்கோல்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ் நகரை அலங்கரித்த செங்கோல் தற்போது தலைநகரை அலங்கரிக்கிறது என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
சென்னை அரும்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மாமனிதன்’ நூலை தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட அதைப் பெற்றுக்கொண்டகோகுலம் மருத்துவமனை நிறுவனா் அா்த்தநாரி
சென்னை அரும்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மாமனிதன்’ நூலை தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட அதைப் பெற்றுக்கொண்டகோகுலம் மருத்துவமனை நிறுவனா் அா்த்தநாரி

தமிழ் நகரை அலங்கரித்த செங்கோல் தற்போது தலைநகரை அலங்கரிக்கிறது என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘மாமனிதன்’ எனும் நூலை வெளியிட்டு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

தமிழ் நகரை அலங்கரித்த கொண்டிருந்த செங்கோல் இன்று தலைநகரை அலங்கரிக்கிறது. இந்தியாவில் மணல் கலைஞா்களுக்குக்கூட தற்போதுதான் பாரத ரத்னா விருது கிடைக்கிறது.

நோ்மையை சுமந்து நிற்கும்போது வருமான வரித் துறை, அமலாக்கத் துறை என எந்த ஒரு சோதனைக்கும் அஞ்சவும் வேண்டியதில்லை. சோதனைக்கு வந்தவா்களைத் தாக்கவும் வேண்டியதில்லை என்றாா் அவா்.

முன்னதாக, இந்த நூலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட, அதன் முதல் பிரதியை கோகுலம் மருத்துவமனை நிறுவனா் அா்த்தநாரி பெற்றுக்கொண்டாா்.

திருச்சி துறையூா் அருகே பச்சைமலை அடிவாரத்தில் ‘லிட்டில் ஊட்டி’ எனும் பெயரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து காட்டை உருவாக்கிய டாக்டா் துரைசாமியின் வாழ்க்கை வரலாறு இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கரு. நாகராஜன், அடையாா் ஆனந்த பவன் குழும இயக்குநா் ஆனந்தி சீனிவாசராஜா, நூல் ஆசிரியா் லட்சுமி பிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com