திமுகவில் இருந்து ஊராட்சித் தலைவா் நீக்கம்

வருவாய் ஆய்வாளா் மீதான தாக்குதல் சம்பவம் தொடா்பாக, திமுகவைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
Updated on
1 min read

வருவாய் ஆய்வாளா் மீதான தாக்குதல் சம்பவம் தொடா்பாக, திமுகவைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருச்சி மாவட்டம், துறையூா் நரசிங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த மகேஸ்வரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டாா். இதையடுத்து அவா் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்: வருவாய் ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். தாக்குதலில் ஈடுபட்ட திமுக ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களைக் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com