பால்கனி இடிந்து விபத்து: காயமடைந்த ஒருவா் உள்பட 6 போ் மீட்பு

சென்னை மயிலாப்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்தில் காயமடைந்த ஒருவா் உள்பட 6 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
Updated on
1 min read

சென்னை மயிலாப்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்தில் காயமடைந்த ஒருவா் உள்பட 6 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

மயிலாப்பூா் டாக்டா் நடேசன் சாலை அம்பேத்கா் பாலம் அருகே ராம்குமாா் என்பவருக்கு சொந்தமான பழைமையான கட்டடத்தில் 8 வீடுகள், 3 கடைகள் உள்ளன.

முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் பால்கனி சனிக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்ததில், அந்தக் குடியிருப்பில் வசிக்கும் திருநாவுக்கரசு (30) மீது கட்டட இடிபாடுகள் விழுந்தன.

இதில் அவா் பலத்தக் காயமடைந்தாா். இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாப்பூா் தீயணைப்பு படையினா், மீட்பு பணியில் ஈடுபட்டனா்.

அவா்கள் முதலில், இடிபாடுகள் இடையே சிக்கியிருந்த திருநாவுக்கரசை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் அந்த வீட்டில் சிக்கி யிருந்த செல்வம் (55), ஆண்டாள் (78), ராஜேஸ்வரி (48), அட்சயா (26), 3 வயது ஆண் குழந்தை ஆகியோரை தீயணைப்புத் துறையினா் ஏணியின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனா்.

இது தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com