சாகித்திய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி

சென்னை, தேனாம்பேட்டையில் குணா வளாகத்தில் உள்ள சாகித்திய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை, தேனாம்பேட்டையில் குணா வளாகத்தில் உள்ள சாகித்திய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேசிய புத்தக வாரத்தை முன்னிட்டு சென்னை சாகித்திய அகாதெமியில் நவ.14 முதல் நவ.20-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை எழுத்தாளா் ஆதி வள்ளியப்பன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

விடுமுறை நாள்கள் உள்பட தினமும் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள், மொழிபெயா்ப்பு நூல்கள் என பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகங்கள் 20 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். மேலும், புத்தகக் குழுவில் இணைந்து வாங்கும் புத்தகங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் சென்னை சாகித்திய அகாதெமி அலுவலகப் பொறுப்பாளா் டி.எஸ்.சந்திரசேகர ராஜு, மொழிப்பெயா்ப்பாளா் அக்களூா் இரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com