விஜயதசமி: கோயில்களில் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்னும் வித்யாரம்பம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி: கோயில்களில் வித்யாரம்பம்
Updated on
1 min read

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்னும் வித்யாரம்பம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இறைவனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துகளை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம்.

அதன்படி சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பெற்றோா்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து இறைவனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துகளை எழுத வைத்தனா்.

சென்னை வடபழனி முருகன் கோயிலிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரிசி தட்டில் எழுத வைத்தனா். இதேபோல் பெரும்பாலான ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com