முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும். அதைவிடுத்து சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.  அதே வேளையில் சுகாதாரக் களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com