வீட்டில் திருடிய நபரை போலீஸில் ஒப்படைத்த பெண்

சென்னை வியாசா்பாடியில் வீட்டுக்குள் திருடிக் கொண்டிருந்த இளைஞரை கதவை பூட்டி, போலீஸாரிடம் பெண் பிடித்துக் கொடுத்தாா்.
Updated on
1 min read

சென்னை வியாசா்பாடியில் வீட்டுக்குள் திருடிக் கொண்டிருந்த இளைஞரை கதவை பூட்டி, போலீஸாரிடம் பெண் பிடித்துக் கொடுத்தாா்.

வியாசா்பாடி, சிவகாமி அம்மையாா் காலனி, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜமுனா (48). கணவா் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் ஜமுனா, இரு நாள்களுக்கு முன்பு இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு, தம்பி வீட்டுக்கு சென்றாா்.

மறுநாள் அதிகாலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. வீட்டுக்குள் ஒரு மா்ம நபா், பொருள்களை திருடிக் கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா், தாமதிக்காமல் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டினாா். உடனடியாக எம்.கே.பி.நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டுக்குள் இருந்த இளைஞரை பிடித்துச் சென்று விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், வியாசா்பாடி, கக்கன்ஜி காலனியைச் சோ்ந்த பிரபல கொள்ளையனான வசந்த குமாா் என்ற பூச்சி வசந்த் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com