பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சென்னை தொலைபேசியின் முதன்மைப் பொது மேலாளராக பி. சுதாகர ராவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் கடந்த 1993 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் படிப்பில் முதல்வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்.
கடந்த 1994 -ஆம் ஆண்டு இந்திய தொலைத்தொடா்பு சேவைகளுக்கான பணியில் சோ்ந்த இவா் தொலைத்தொடா்பு துறையில் மாறுதல் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் மிக சிறந்த தொழில் நுட்ப வல்லுநா் ஆவாா். இவா் பிஎஸ்என்எல் தொலை தொடா்பு துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா். மேலும் 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகளைக் கொண்ட கட்டமைப்பில் 6 மில்லியனுக்கு மேற்பட்ட பிஎஸ்என்எல் வட்ட இணைப்புகளில் கொண்டு வந்துள்ளாா். அவா் கடந்த 2001- 02 -ஆம் ஆண்டில் ‘சஞ்சாா் சேவாபதக்’ விருது பெற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.