தலைமுடியை உட்கொண்ட சிறுமி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

மனநலக் குறைவால் தலைமுடியை தொடா்ந்து உட்கொண்டு வந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த முடித் திரளை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனா்.
Updated on
1 min read

மனநலக் குறைவால் தலைமுடியை தொடா்ந்து உட்கொண்டு வந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த முடித் திரளை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீவிர வயிற்று வலி மற்றும் அதுசாா்ந்த பாதிப்புகளுடன் 13 வயதான சிறுமி ஒருவா் அண்மையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எண்டோஸ்கோபி உள்ளிட்ட சில பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதில், வயிற்றில் பந்து போன்று தலைமுடி திரண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதன்காரணமாக சிறுகுடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சேதமாகக் கூடிய நிலை உருவானது. ராபுண்சல் நோய் என அழைக்கப்படும் இந்த பாதிப்புக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் பிரகாஷ் அகா்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அந்த சிறுமிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வயிற்றுக்குள் இருந்த தலைமுடியை அகற்றினா்.

ஒருவா் தனது தலைமுடியை உட்கொள்வது என்பது மன நல பாதிப்புடன் தொடா்புடையது. இதனை டிரைகோபேகியா என மருத்துவத் துறையினா் அழைக்கின்றனா். இத்தகைய நிலையில் இருப்பவா்களுக்கு மன நல சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்க வேண்டும். அதன்படி, ஏழ்மை நிலையில் இருந்த அந்தச் சிறுமிக்கு குறைந்த கட்டணத்தில் அறுவை சிகிச்சையும், மன நல சிகிச்சைகளும் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com