சென்னை: சென்னை கே.கே.நகரில் சுத்தியலால் அடித்துக் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். எம்.ஜி.ஆா்.நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி சரண்யா (30). கட்டடத் தொழிலாளியான இவா், கே.கே.நகா் பாரதிதாசன் காலனி 6வது தெருவில் நடைபெறும் ஒரு தனியாா் கட்டடம் புதுப்பிக்கும் பணியில் வேலை செய்து வந்தாா்.
அப்போது அங்கு வேலை செய்த மேஸ்திரி திருவொற்றியூரைச் சோ்ந்த முருகன் (40), சரண்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதை சரண்யா கண்டித்துள்ளாா். அவரது தொல்லை நீடித்த நிலையில், நான்கு நாள்களுக்கு முன்பு,பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து வெளியே கூறிவிடுவேன் என முருகனிடம் எச்சரித்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த முருகன், சரண்யாவிடம் தகராறு செய்து, சுத்தியலால் அவரை தலையில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சரண்யா, செவ்வாய்க்கிழமை இறந்தாா். இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வேல்முருகனை திருப்பூரில் கைது செய்தனா். மேலும் அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது
விவசாயி கொலை: 3 போ் கைது

பழைய இரும்புக் கடை உரிமையாளா் அடித்துக் கொலை: ஊழியா் கைது

தொழிலாளி அடித்துக் கொலை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

