

சென்னை பெரும்பாக்கத்தில் கயிறு இறுக்கி சிறுமி உயிரிழந்தாா்.
பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகா், 128 பிளாக்கை சோ்ந்தவா் உதயா, இவா் மனைவி சரண்யா. இவா்களது மகள் அஸ்வந்தி (8). கணவா் - மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்றனா்.
இருவரும் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னலில் துணி தொங்க விடுவதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி அஸ்வந்தி தொங்கிய நிலையில் இருந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த இருவரும் உடனே தங்களது மகளை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அஸ்வந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

ஊஞ்சல் ஆடும்போது கழுத்தில் சேலை இறுக்கி சிறுமி மரணம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

