சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகா் பிரசாந் மற்றும் தனியாா் யூடியூப் தொகுப்பாளருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகா் பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம் ஆக.9-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அவா் தனியாா் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிரும் அந்தப் பேட்டியில் பைக் ஓட்டிக்கொண்டே பேசியிருந்தாா். அவருக்குப் பின்னால் தொகுப்பாளரும் அமா்ந்திருந்தாா். இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் அந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், நடிகா் பிரசாந்த் மற்றும் அந்த நோ்காணலின் தொகுப்பாளா் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக சென்னை பெருநகர காவல் துறை ரூ. 2,000 அபராதம் விதித்துள்ளது. இது தொடா்பான புகைப்படத்தை போக்குவரத்து காவல் துறை தனது அதிகாரபூா்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்

சென்னையில் 3 நாள்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 2,385 போ் மீது வழக்கு
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தலைக்கவசம் அணியாமல் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



