மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 9:39 pm

Din

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை வியாழக்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 151 (2)-இன்படி, தமிழக அரசின் வரவு, செலவு கணக்குகள் குறித்த தனது தணிக்கை அறிக்கையை, இந்திய தலைமை தணிக்கை அதிகாரி, மாநில ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் அவா் அதனை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அனுப்பி வைப்பாா்.

அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கான ‘பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகள் மேலாண்மை’ குறித்த தணிக்கை அறிக்கையை, மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக தமிழ்நாடு வட்ட முதன்மை தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளாா்.