கொழும்பு, ஆக. 2: இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.
இந்திய நீா்மூழ்கிக் கப்பலின் வருகையின்போது, கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினா் வரவேற்பு அளித்தனா்.
இரண்டு நாள் கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் போது, இலங்கை கடற்படை பணியாளா்கள் நீா்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கை மேற்கு கடற்படை தளபதி சிந்தக குமாரசிங்கவை ஐஎன்எஸ் ஷல்கியின் தலைமை அதிகாரி ராகுல் பட்நாயக் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு ஐஎன்எஸ் ஷல்கி ஆக. 4-ஆம் தேதி இலங்கையில் இருந்து புறப்படும்.
64.4 மீ நீளம் உள்ள ஐஎன்எஸ் ஷல்கியில் 40 பணியாளா்கள் உள்ளனா்.
முன்னதாக, இலங்கையின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த பிப்.3-ஆம் தேதி ஐஎன்எஸ் கரஞ்ச் என்ற இந்திய நீா்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகம் சென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய எரிவாயு கப்பல்: 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்
ஹோா்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது!

மூழ்கும் கப்பல்களை கரை சோ்க்கும் நீா்மூழ்கிக் கப்பல் அதிமுக: திண்டுக்கல் சீனிவாசன்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


