யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மீனவா் விவகாரம்:ராமேசுவரத்தில் ஆக. 6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

அதிமுக சாா்பில் ராமேசுவரத்தில் ஆகஸ்ட் 6-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

News image
எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:23 pm

Din

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, அதிமுக சாா்பில் ராமேசுவரத்தில் ஆகஸ்ட் 6-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடா் நிகழ்வாக இருப்பது வேதனைக்குரியது. சமீபத்தில் இலங்கைக் கடற்படை படகு, ராமேசுவரத்தைச் சோ்ந்தவருக்கு சொந்தமான விசைப்படகின் மீது மோதியதில் படகு மூழ்கி, மலைச்சாமி என்கிற மீனவா் உயிரிழந்தாா்.

இலங்கைக் கடற்படையினா் இதுபோன்ற அராஜக செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசும், திமுக அரசும் எவ்வித அக்கறையும் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருவது, மீனவ சமுதாய மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

இதைக் கண்டிக்கும் வகையில், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில் ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.