'தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு' விழிப்புணர்வு பிரசாரம்

‘தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு' என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய பிரசாரத்தை சென்னை மேயர் தொடங்கி வைத்தார்.
சென்னை மேயர் ஆர்.பிரியா
சென்னை மேயர் ஆர்.பிரியா
Published on
Updated on
1 min read

‘தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு' என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய பிரசாரத்தை சென்னை மேயர் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேயர் ஆர்.பிரியா சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்காவில் தொடங்கிய பிரசாரத்தில் "தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு' என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் விடியோ காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது இடங்களில் பாலியல் தொல்லைகளைக் கண்டால் பெண்கள், பொதுமக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், மண்டலக் குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், பாலினம், கொள்கை ஆய்வகத்தின் குழுத் தலைவர் மீரா சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com