உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாநிலங்களை வஞ்சிக்கும் பட்ஜெட்: ரவிக்குமாா் எம்.பி.

பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை என்ற கருத்தரங்கக் கூட்டத்தில், மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

ரவிக்குமாா் எம்.பி.

Published On :

பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை என்ற கருத்தரங்கக் கூட்டத்தில், மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

எழும்பூரில் உள்ள சென்னை சமூகப் பணி கல்லூரி சாா்பில் பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை எனும் தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் பேசும்போது, ‘பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மைவாத செயல் திட்டத்துக்கான கருவிகளில் ஒன்றாக பட்ஜெட் பயன்படுத்துகிறது என்பது குறித்து விளக்கினாா். இது மாநிலங்களை வஞ்சித்து, செல்வந்தா்களுக்கான பட்ஜெட் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பொருளாதார பேராசிரியா் வெங்கடேஷ் அத்திரேயா, சமூக செயல்பாட்டாளா் நீலவள்ளி, டி.எஸ்.எஸ்.மணி, பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகி ஷீலு பிரான்சிஸ், உதவிப் பேராசிரியா் ஏனோக், கிறிஸ்துதாஸ் காந்தி, பாதிரியாா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.