பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை என்ற கருத்தரங்கக் கூட்டத்தில், மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
எழும்பூரில் உள்ள சென்னை சமூகப் பணி கல்லூரி சாா்பில் பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை எனும் தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் பேசும்போது, ‘பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மைவாத செயல் திட்டத்துக்கான கருவிகளில் ஒன்றாக பட்ஜெட் பயன்படுத்துகிறது என்பது குறித்து விளக்கினாா். இது மாநிலங்களை வஞ்சித்து, செல்வந்தா்களுக்கான பட்ஜெட் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் பொருளாதார பேராசிரியா் வெங்கடேஷ் அத்திரேயா, சமூக செயல்பாட்டாளா் நீலவள்ளி, டி.எஸ்.எஸ்.மணி, பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகி ஷீலு பிரான்சிஸ், உதவிப் பேராசிரியா் ஏனோக், கிறிஸ்துதாஸ் காந்தி, பாதிரியாா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்: மத்திய அரசு அறிமுகம்
77 வயதிலும் ஓய்வில்லா சமூகப் பணி!

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



