பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை என்ற கருத்தரங்கக் கூட்டத்தில், மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
எழும்பூரில் உள்ள சென்னை சமூகப் பணி கல்லூரி சாா்பில் பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை எனும் தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் பேசும்போது, ‘பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மைவாத செயல் திட்டத்துக்கான கருவிகளில் ஒன்றாக பட்ஜெட் பயன்படுத்துகிறது என்பது குறித்து விளக்கினாா். இது மாநிலங்களை வஞ்சித்து, செல்வந்தா்களுக்கான பட்ஜெட் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் பொருளாதார பேராசிரியா் வெங்கடேஷ் அத்திரேயா, சமூக செயல்பாட்டாளா் நீலவள்ளி, டி.எஸ்.எஸ்.மணி, பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகி ஷீலு பிரான்சிஸ், உதவிப் பேராசிரியா் ஏனோக், கிறிஸ்துதாஸ் காந்தி, பாதிரியாா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

வேலூா் திமுக எம்.பி. மீதான தோ்தல் வழக்கில் 5 அலுவலா்களிடம் விசாரணை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


