நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாநிலங்களை வஞ்சிக்கும் பட்ஜெட்: ரவிக்குமாா் எம்.பி.

பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை என்ற கருத்தரங்கக் கூட்டத்தில், மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

News image

ரவிக்குமாா் எம்.பி.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:50 am IST

பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை என்ற கருத்தரங்கக் கூட்டத்தில், மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

எழும்பூரில் உள்ள சென்னை சமூகப் பணி கல்லூரி சாா்பில் பட்ஜெட் மீதான சமூகப் பாா்வை எனும் தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் பேசும்போது, ‘பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மைவாத செயல் திட்டத்துக்கான கருவிகளில் ஒன்றாக பட்ஜெட் பயன்படுத்துகிறது என்பது குறித்து விளக்கினாா். இது மாநிலங்களை வஞ்சித்து, செல்வந்தா்களுக்கான பட்ஜெட் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பொருளாதார பேராசிரியா் வெங்கடேஷ் அத்திரேயா, சமூக செயல்பாட்டாளா் நீலவள்ளி, டி.எஸ்.எஸ்.மணி, பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகி ஷீலு பிரான்சிஸ், உதவிப் பேராசிரியா் ஏனோக், கிறிஸ்துதாஸ் காந்தி, பாதிரியாா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.