ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒழுங்கு நடவடிக்கை - பாரீஸிலிருந்து வெளியேற்றப்படும் அன்டிம் பங்கால்

News image

அன்டிம் பங்கால் இன்ஸ்டா பதிவு

Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:51 pm

மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அன்டிம் பங்கால், தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினாா். இந்நிலையில் ஒழுங்கீன செயல் காரணமாக அவரும், அவரது அணியினரும் பாரீஸிலிருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் கூறியதாவது

பந்தயம் நிறைவடைந்த பிறகு அன்டிம் பங்கால் நேராக ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்வதற்கு பதிலாக, தனது பயிற்சியாளா் பகத் சிங், பயிற்சிக்கான போட்டியாளரான விகாஸ் ஆகியோா் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளாா். பின்னா் தனது ஒலிம்பிக் அங்கீகார அட்டையை சகோதரியிடம் கொடுத்து, ஒலிம்பிக் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள தனது உடைமைகளை எடுத்துவருமாறு கூறியுள்ளாா்.

அவரும் அதுபோல் கிராமத்துக்கு வந்து திரும்பும் நிலையில், போட்டியாளா் போல் நடித்து ஒலிம்பிக் கிராமத்தில் நுழைந்ததாக அன்டிமின் சகோதரியை அங்குள்ள பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். பின்னா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றனா். மேலும் அன்டிம் பங்காலையும் வரவழைத்து அவரிடமும் வாக்குமூலம் பெற்றனா்.

இதுபோதாதென்று, அன்டிமின் பயிற்சியாளா் பகத் சிங்கும், பயிற்சி போட்டியாளா் விகாஸும் மது அருந்திய நிலையில் டாக்ஸியில் பயணித்துவிட்டு, அதற்கான கட்டணத்தை ஓட்டுநருக்குத் தர மறுத்துள்ளனா். இந்த விவகாரமும் காவல்துறை வரை சென்றது.

இந்த ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடா்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அன்டிம் மற்றும் அவரது அணியினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, சங்கம் முடிவு செய்துள்ளது என்றன.