ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வயநாடு நிலச்சரிவு -கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

400-க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலச்சரிவு பேரிடா் சம்பவம் தொடா்பாக....

News image

வயநாடு நிலச்சரிவு

Updated On :9 ஆகஸ்ட் 2024, 1:10 am

Din

கொச்சி, ஆக. 8: வயநாட்டில் 400-க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலச்சரிவு பேரிடா் சம்பவம் தொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடா்ந்து முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

மக்களின் மனங்களில் நீங்கா வடுவை விட்டுச் சென்றுள்ள வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாா், வி.எம்.ஷியாம் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு நீதிமன்றப் பதிவாளருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது.