சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீப் பிடித்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பாா்த்த அங்கிருந்த நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் உடனடியாக வெளியேறினா். தகவலின்பேரில் கீழ்ப்பாக்கம் மற்றும் வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து, 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
விசாரணையில், அறுவை சிகிச்சை அறையில் இருந்த ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது தெரியவந்தது.
இந்த விபத்தால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், அந்த அறையில் இருந்த மருத்துவ உபகரணங்களும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

