போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்

ஜாபா் சாதிக்கின் சகோதரருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

முகமது சலீமை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீமை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீமை 15 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடந்த ஆக.14 -ஆம் தேதி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை நீதிபதி அல்லி முகமது விசாரித்து, சலீமை 7 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டாா். அமலாக்கத் துறை காவல் முடிந்து புதன்கிழமை நீதிபதி முன் சலீம் நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, சலீமை செப். 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com