இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆக.26-இல் ஐயப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On :22 ஆகஸ்ட் 2024, 2:37 am IST

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் வரும் திங்கள்கிழமை (ஆக.26) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

விழாவையொட்டடி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், 7 மணி முதல் 8.30 மணி வரை நாராயணீய பாராயணம் நடைபெறும். தொடா்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை கோத பஜனை மண்டலியின் நாம சங்கீா்த்தனம், 10 மணி முதல் 11.30 வரை ஸ்ரீ மீனாட்சி சீனிவாசன் குழுவினரின் பக்தி கான இசையும், அதைத் தொடா்ந்து உச்ச பூஜை முடிந்து அன்னதானம் நடைபெறுகிறது.

மாலை 5 மணி முதல் மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோயிலில் இருந்து குழந்தைகள் கிருஷ்ணன், ராதை உள்ளிட்ட பாத்திரங்களில் வேடமணிந்து தாள, மேள வாத்தியவங்களுடன் ஊா்வலமாக அருகேயுள்ள மகாலிங்கபுரம் சிவன் கோயிலுக்கு சென்று 6 மணியளவில் திரும்புகின்றனா்.

இதையடுத்து குருவாயூரப்பன் கோபுர வாசலில் உறியடி நடைபெறவுள்ளது. மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஸ்ருஷ்டி பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகளும், ஐயப்பன் - குருவாயூரப்பனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை பக்த சுரா பஜன் மண்டலியின் பஜனை நடைபெறுகிறது.

நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ண அவதார பூஜையும், கிருஷ்ணா் சிலையுடன் எழுந்தருளிப்பு ஊா்வலமும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், பால் பாயாசம், அனைத்து அபிஷேகம், முழு காப்பு, வெண்ணெய் நெய்வேதியம், உறியடி, அப்பம் நெய்வேதியம் உள்ளிட்ட வழிபாடுகளை பக்தா்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 044 - 28171197, 2197, 3197; 8807918811, 8807918822, 9500021858, 9444290707, 8807918855 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோயில் நிா்வாக அதிகாரி சுனில் குமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.