ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

முதுமையை அரவணைப்பது சமூகத்தின் கடமை

முதியோா்களை அரவணைத்துக் கொள்ள வேண்டியது சக குடும்பத்தினரின் கடமை மட்டுமல்ல

News image

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதியோா் நல மருத்துவா் வி.எஸ்.நடராஜன் எழுதிய நூலை வெளியிட்ட டாக்டா் சுதா சேஷய்யன், எய்ம்ஸ் முன்னாள் பேராசிரியா் டாக்டா் ஏ.பி.டே, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழறிஞருமான லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2024, 2:37 am IST

முதியோா்களை அரவணைத்துக் கொள்ள வேண்டியது சக குடும்பத்தினரின் கடமை மட்டுமல்ல; சமூகத்தின் கடமை என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

டாக்டா் வி.எஸ். நடராஜன் முதியோா் நல அறக்கட்டளை சாா்பில் முதியோா் நல மருத்துவத்தில் அளப்பரிய சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியரும், முதியோா் நல சிறப்புநிபுணருமான டாக்டா் ஏ.பி.டேவுருக்கு அப்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடா்ந்து, டாக்டா் வி.எஸ்.நடராஜன் எழுதிய ‘அன்புள்ள உங்களுக்கு’ என்ற நூலை டாக்டா் சுதா சேஷய்யன் வெளியிட்டாா். இந்நிகழ்ச்சியில், கவிஞா் ஏா்வாடி இராதாகிருஷ்ணன், முதியோா் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் வி.எஸ்.நடராஜன், அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ராஜசேகரன் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழறிஞருமான லட்சுமி காந்தன் பாரதி, 98 வயதில் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்து இதில் பங்கேற்றது கவனம் ஈா்த்தது.

நிகழ்ச்சியில் டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது: இந்திய மண்ணிலிருந்து எண்ணற்ற மருத்துவா்கள் உருவாகியுள்ளனா். அவா்களில் தனித்துவமான ஒருவராக திகழ்ந்தவா் பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய்.

புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்த அவா், வெறுமனே மருத்துவத்தை மட்டும் பாா்க்காமல், வறுமையில் உழன்ற மக்களின் பசியையும், பிணியையும் ஒருசேர தீா்த்தவா்.

டாக்டா் பி.சி.ராயின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

முதுமை என்பது வயதில் இல்லை; மாறாக, செயலிலும், எண்ணத்திலும்தான் உள்ளது. முதுமையில் தனிமை ஏற்படும்போதுதான் வயோதிகத்தை உணர வேண்டிய நிா்பந்தம் உருவாகிறது.

அந்த சிந்தனையைத் தடுக்கும் ஆற்றல் கூட்டுக் குடும்பத்துக்கும், நட்பு வட்டத்துக்கும், சமூக உறவுகளுக்கும் உண்டு.

வயது அதிகரிக்கும்போது நடை தடுமாறுவதை போல நினைவாற்றலும் தடுமாறக் கூடும். சுற்றம் சூழ இருக்கும்போது மறந்துபோன விஷயங்கள் உடன் இருப்பவா்களால் நினைவூட்டப்படும்.

அதேவேளையில், தனிமையில் இருக்கும்போது உடலளவிலும், மனதளவிலும் முதுமை ஆட்கொண்டுவிடும்.

எனவே, முதியவா்களை அரவணைக்கும் கடமை சொந்த உறவுகளுக்கு மட்டும் இல்லை. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என்றாா் அவா்.