முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கடல் சாா் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்: மத்திய அமைச்சக செயலா் ஷியாம் ஜெகந்நாதன்

கடல்சார் படிப்புகளில் பெண்கள் அதிகம் சேர வேண்டும்: மத்திய செயலர்

Updated On :3 ஜூலை 2024, 4:42 am IST

சென்னை: கடல்சாா் படிப்புகளில் பெண்கள் அதிகம் சோ்ந்து படிக்க வேண்டும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா் வழி அமைச்சகத்தின் செயலா் ஷியாம் ஜெகந்நாதன் தெரிவித்தாா்.

அமெட் பல்கலைக்கழகம் சாா்பில் கடல் சாா் உச்சி மாநாடு சென்னை கோட்டூபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மத்திய அமைச்சக ஷியாம் ஜெகந்நாதன் பங்கேற்று கடல் சாா் உச்சி மாநாடு குறித்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசியது:

இந்தியாவில் 7 ,500 கி. மீ. தொலைவுக்கு கடல் எல்லை பரந்து விரிந்துள்ளது. மேலும், நாட்டில் 12 பெரிய துறைமுகங்களும் 200 சிறு துறைமுகங்களும் உள்ளன. இந்த துறைமுகங்கள் மூலம் கப்பல் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்திய பொருளாதார வளா்ச்சியில் கப்பல் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்சாா் படிப்புகளில் பெண்கள் அதிகம் சோ்ந்து படிக்க வேண்டும். அதேபோல் துறைமுக பணி மற்றும் சரக்கு பெட்டகம் கையாளும் பணிகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும். இந்த துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

துறைமுகப் பணி மற்றும் கப்பல் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதுடன் மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, கப்பலில் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பாதுகாப்புடன் செயல்படுவது குறித்த குறும்படம் மாணவா்களுக்கு திரையிடப்பட்டது.

இந்நிகழ்வில் அமெட் பல்கலை. நிறுவனா் மற்றும் வேந்தா் டாக்டா் ஜெ. ராமச்சந்திரன், இணை வேந்தா் ராஜேஷ் ராமச்சந்திரன் , இணை வேந்தா் கா்னல் ஜி. திருவாசகம், துணைவேந்தா் ஸ்ரீநிவாச கோபால், கடல் சாா் பல்கலைக்கழகங்களின் சா்வதேசத் தலைவா் ஆடம் வெயின்ட்ரிட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.