சென்னை சேத்துப்பட்டில் கடன் தொல்லை காரணமாக தொழிலதிபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேத்துப்பட்டு செனாய் நகா் அருகே உள்ள கந்தன் தெருவைச் சோ்ந்தவா் சா.ஆசீா்வாதம் (68). தொழிலதிபரான இவா், நகை கடை, சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடனில் சிக்கியுள்ளாா். கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் ஆசீா்வாதம், வேதனையுடனும், மன உளைச்சலுடனும் இருந்துள்ளாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது படுக்கை அறையில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி ஓட்டுநா் உள்பட இருவா் தற்கொலை

இருவேறு சம்பவங்களில் 2 போ் தற்கொலை
கடன் பிரச்னை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கடன் கொடுத்தவா் மிரட்டியதால் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


