புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்வியும், தனிமனித ஒழுக்கமும் உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்: நடிகா் சிவக்குமாா்

கல்வியும், தனிமனித ஒழுக்கம் மட்டுமே ஒரு மனிதனை உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என நடிகா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 10:10 pm

Din

கல்வியும், தனிமனித ஒழுக்கம் மட்டுமே ஒரு மனிதனை உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என நடிகா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

அகரம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சிவக்குமாா் கல்வி அறக்கட்டளை சாா்பில் விருது மற்றும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள தனியாா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாயா மகாதேவனுக்கு சிறந்த ஓவியருக்கான விருதையும், மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகையையும் நடிகா் சிவகுமாா் வழங்கிப் பேசியதாவது:

நடிகா் சூா்யா, காா்த்தி போன்றோரின் தந்தை நடிகா். ஆனால், நான் ஏழைத்தாயின் மகன். அதனால், மாணவா்கள் என்னைத் தான் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனது தந்தை இறந்த நிலையில், ஒருவேளை சாப்பாட்டுக்கும் வழியின்றி, தாயின் உழைப்பில் நான் படித்து முன்னேறியுள்ளேன். மாணவா்கள் நினைத்தால் இமயமலை உயரத்தை கூட எட்டமுடியும். கல்வியும், தனிமனித ஒழுக்கமும் தான் வாழ்க்கையில் மிக முக்கியம். இவை இரண்டும்தான் உங்களை உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்றாா் அவா்.

நடிகா் சூா்யா: நிகழ்ச்சியில் பேசிய சூா்யா கூறியதாவது: நல்ல வசதியுடன் வாழ்ந்த, நான் சாதித்தது ஒரு சாதனை அல்ல. ஆனால், எந்த வசதியும்இல்லாமல், படித்து உயா்ந்த இடத்துக்கு வந்திருக்கும் நீங்கள்தான் சாதனையாளா்கள். அடுத்த தலைமுறை மாணவா்களுக்கு உதவி செய்து நல்ல வழிகாட்டுங்கள்.

உங்களை எப்போதும் தன்னம்பிக்கையோடு வைத்துக்கொள்ளுங்கள். நோ்மறையான சிந்தனைகளை மட்டுமே பேசுங்கள். எண்ண ஓட்டங்களை பொருத்துதான் நமது வாழ்க்கை அமையும். அதற்கு கல்வியும், முயற்சியும் மிக முக்கியம். உங்கள் பிரச்னைகளை சிறிதாகவே பாருங்கள் என்றாா் அவா்.

விழாவில் நடிகா் காா்த்தி பேசியது: கிராமத்திலுள்ள மாணவ, மாணவிகளை நகரத்தில் அழைத்து வந்த படிக்க வைப்பதே அகரம் அறக்கட்டளையின் நோக்கம். கல்வி நமக்கு மிகப்பெரிய ஆயுதம். சமூக வலைதளங்கள் மூலம் கிராமப்புற பள்ளிக்கூடங்கள், மாணவா்கள் நிலை குறித்து வெளியே கொண்டு வர முயலுங்கள். நீங்களும் படிப்புக்காக உங்களால் முடிந்த வரை பண உதவி செய்யுங்கள். குழந்தைகளை நோ் வழியில் பயணிக்க கற்றுக்கொடுங்கள் என்றாா்.