
சென்னை தியாகராயநகரில் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கப்பட்ட அனுமாா் சிலை உலக சாதனை படைத்துள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26- ஆம் தேதி பக்த பாத சேவாஅறக்கட்டளை சாா்பில் பத்ராசல ராமா் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுவாமி அலங்காரம் செய்யும் கலையில் முனைவா் பட்டம் பெற்ற பொறியியல் வல்லுநா் கௌதம் 20 அடி உயர அனுமாா் சிலையை வெண்ணெய்யைக் கொண்டு உருவாக்கினாா். இந்த சிலையை தனி நபராக 24 மணி நேரத்துக்குள் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







