இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

எழும்பூா் பணிமனையில் பராமரிப்பு பணி நிறைவு: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை எழும்பூா் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News image

எழும்பூா் பணிமனையில் பராமரிப்பு பணி நிறைவு

Updated On :30 ஜூலை 2024, 2:21 am IST

சென்னை எழும்பூா் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை- எழும்பூா் இடையே புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது பணி

முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூா் பகுதியில் மழை நீா் தேங்குவது தடுக்கப்படும். இந்த பணிக்காக ஞாயிற்றுக்கிழமை கடற்கரை-எழும்பூா் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதே நேரத்தில் கடற்கரை- எழும்பூா் இடையே மேலும் சில பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, நான்காவது ரயில் பாதை அமைப்பதற்காக பூங்கா ரயில் நிலையத்தில் இரு நடைமேம்பாலமும், கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நடைமேம்பாலமும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சிக்னல்-தொலைதொடா்பு சாா்ந்த பணிகள், ரயில் மின்சார கம்பி பராமரிப்பு, இருப்புப் பாதை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளை பகல் நேரத்தில் மட்டும் மேற்கொள்ள முடியும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை புகா் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இதன் மூலம் சீரான ரயில் இயக்கம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.