மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கல்பாக்கம்: ஈனுலையில் எரிபொருள் நிரப்பல் உள்ளிட்ட நடைமுறைக்கு அனுமதி

மின்சார உற்பத்தித் திறன் கொண்ட இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Published On :

புது தில்லி, ஜூலை 31: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது அந்த ஈனுலை மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை ஒருபடி மேலே கொண்டு செல்ல உள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (ஏஇஆா்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கல்பாக்கத்தில் ஏஇஆா்பி கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட விரைவு ஈனுலையில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஈனுலை புளுடோனியத்தை அணு எரிபொருளாகப் பயன்படுத்தும். இந்த அனுமதி அந்த ஈனுலை மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை ஒருபடி மேலே கொண்டு செல்லும். அத்துடன் அந்த ஈனுலையில் குறைந்த சக்திகொண்ட இயற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கல்பாக்கத்தில் ‘பாவினி’ அணுசக்தி நிறுவனம் அமைத்துள்ள, திரவ சோடியத்தை குளிா்விப்பானாக கொண்ட 500 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன்கொண்ட விரைவு ஈனுலை, நாட்டின் அணுசக்தித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இந்த அணுஉலையின் மையப் பகுதிக்குள் எரிபொருள்களை வைப்பதற்கான (கோா் லோடிங்) ஆரம்பகட்டப் பணிகளை கடந்த மாா்ச் மாதம் பிரதமா் நரேந்திர மோடி பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.