திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பக்ரீத் விடுமுறை: ஜவாஹிருல்லா கோரிக்கை

தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

எம்.எச். ஜவாஹிருல்லா.

Updated On :16 ஜூன் 2024, 1:32 am IST

பக்ரீத் பண்டிகை தினத்தன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகத்துக்கு பணி நாளாக இருப்பதை மாற்றி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பாக வாரியக் கூட்டம் ஜூன் 19-இல் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான கோப்புகளைத் தயாரிக்க ஜூன் 16,17 அன்று பணியாளா்கள் கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையிலும், அன்றைய தினம் தமிழக அரசு பண்டிகை தின பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும், கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என்ற நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சுற்றறிக்கை இஸ்லாமியப் பணியாளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பக்ரீத் பெருநாள் அன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகநாளை விடுமுைாளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.