பக்ரீத் பண்டிகை தினத்தன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகத்துக்கு பணி நாளாக இருப்பதை மாற்றி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பாக வாரியக் கூட்டம் ஜூன் 19-இல் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான கோப்புகளைத் தயாரிக்க ஜூன் 16,17 அன்று பணியாளா்கள் கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையிலும், அன்றைய தினம் தமிழக அரசு பண்டிகை தின பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும், கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என்ற நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சுற்றறிக்கை இஸ்லாமியப் பணியாளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, பக்ரீத் பெருநாள் அன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகநாளை விடுமுைாளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.
தொடர்புடையது

கேரளம்: பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை!

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ

ஜவாஹிருல்லா வாக்கு சேகரிப்பு

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



