மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பக்ரீத் விடுமுறை: ஜவாஹிருல்லா கோரிக்கை

தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

எம்.எச். ஜவாஹிருல்லா.

Published On :

பக்ரீத் பண்டிகை தினத்தன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகத்துக்கு பணி நாளாக இருப்பதை மாற்றி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பாக வாரியக் கூட்டம் ஜூன் 19-இல் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான கோப்புகளைத் தயாரிக்க ஜூன் 16,17 அன்று பணியாளா்கள் கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையிலும், அன்றைய தினம் தமிழக அரசு பண்டிகை தின பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும், கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என்ற நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சுற்றறிக்கை இஸ்லாமியப் பணியாளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பக்ரீத் பெருநாள் அன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகநாளை விடுமுைாளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.