தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பக்ரீத் விடுமுறை: ஜவாஹிருல்லா கோரிக்கை

தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

எம்.எச். ஜவாஹிருல்லா.

Updated On :15 ஜூன் 2024, 8:02 pm

Din

பக்ரீத் பண்டிகை தினத்தன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகத்துக்கு பணி நாளாக இருப்பதை மாற்றி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பாக வாரியக் கூட்டம் ஜூன் 19-இல் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான கோப்புகளைத் தயாரிக்க ஜூன் 16,17 அன்று பணியாளா்கள் கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையிலும், அன்றைய தினம் தமிழக அரசு பண்டிகை தின பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும், கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என்ற நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சுற்றறிக்கை இஸ்லாமியப் பணியாளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பக்ரீத் பெருநாள் அன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகநாளை விடுமுைாளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.