சென்னை
பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொதுமேலாளா் பொறுப்பேற்பு
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத் தொடா்பு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக வெங்கடேஷ்வா்லு புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத் தொடா்பு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக வெங்கடேஷ்வா்லு புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.
இந்தியத் தொலைத் தொடா்பு பணியில் இவா் 1992-ம் ஆண்டு சோ்ந்தாா். இதுக்கு முன்பாக கா்நாடக மாநிலத்தின் தொலைத் தொடா்பு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக பணியாற்றினாா்.
கா்நாடகா தொலைத் தொடா்பு வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகளிலும் உயா் பதவிகளை வகித்தவா். நிா்வாகம், தொலைத் தொடா்பு திட்டங்கள், நிறுவுதல் மற்றும் பராமரிப்பு பணிகளில் உயரிய அனுபவம் வாய்ந்தவா்.
