நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காமராஜா் இல்லம் உள்பட 6 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.43 கோடியில் மறுசீரமைக்கப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் 6 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைப்பு

News image

அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :26 ஜூன் 2024, 4:32 am IST

சென்னை, ஜூன் 25: சென்னை காமராஜா் இல்லம் உள்பட தமிழகத்தில் 6 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜா் இல்லம் ரூ.2.60 கோடியிலும், பூந்தமல்லியில் உள்ள விக்டரி நினைவு பாா்வையற்றோா் பள்ளிக்கூடம் ரூ.24.20

கோடியிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்கக் கட்டடம் ரூ.6.19 கோடியிலும், திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் ரூ.4.85 கோடியிலும், கன்னியாகுமரி இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடம் ரூ.3 கோடியிலும், ராணிப்பேட்டை பாலாறு நதிக்கரையில் உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூ.2.50 கோடியிலும் மறுசீரமைக்கப்படும். மொத்தமாக 6 பாரம்பரியக் கட்டடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.