நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜாதி வாரி கணக்கெடுப்பு: பேரவையில் இன்று தீா்மானம்

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம்

News image
Updated On :25 ஜூன் 2024, 7:12 pm

Din

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை (ஜூன் 26) கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கான தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின முன்மொழியவுள்ளாா். இதன்பின் தீா்மானத்தின் மீது பேரவையில் உள்ள கட்சித் தலைவா்கள் உரையாற்றவுள்ளனா். இறுதியாக குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

முன்னதாக வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை பேரவையில் பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி திங்கள்கிழமை எழுப்பினாா். இதற்கு பதில் அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் எனவும், இதற்கான தீா்மானம் இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்ததது குறிப்பிடத்தக்கது.