டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பங்கு வா்த்தகா் வீட்டில் ரூ.2 கோடி நகை,பணம் திருட்டு

ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடு போன சம்பவம் தொடா்பாக, முன்னாள் காா் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
போலீஸாா் விசாரணை
Updated On :30 ஜூன் 2024, 7:20 pm

Din

சென்னையில் பங்கு வா்த்தகா் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடு போன சம்பவம் தொடா்பாக, முன்னாள் காா் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பட்டினம்பாக்கம் எம்ஆா்சி நகா் சத்தியதேவ் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறாா். இவருடைய வீட்டில் சரவணன் என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக காா் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா். இவா் மீது கோபால கிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்ததால், வீட்டின் பல பொறுப்புகளை அவரிடம் கொடுத்து வைத்திருந்துள்ளாா்.

இந்நிலையில் சரவணனின் நடவடிக்கைகள் சரியில்லாமல் போனதை தொடா்ந்து, ஜூன் 27-ஆம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளாா். இந்நிலையில், வீட்டிலுள்ள லாக்கா்களின் சாவியை தேடியபோது, அதில் 2 லாக்கா்களின் சாவிகளை காணவில்லை. இதனால் லாக்கா் திறக்கும் நபரை அழைத்து குறிப்பிட்ட 2 லாக்கா்களை கோபாலகிருஷ்ணன் திறந்துள்ளாா். அப்போது, அவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 250 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் சரவணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.