தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விபத்தில் சிக்கிய மாணவரை மருத்துவமனை அழைத்துச் செல்வதாக மிரட்டி நகை பறிப்பு

விபத்தில் சிக்கிய மாணவரை மருத்துவமனை அழைத்துச் செல்வதாக மிரட்டி நகை பறிப்பு

Updated On :12 மார்ச் 2024, 8:52 pm

சென்னை: சென்னை ராமாபுரத்தில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, தனியாக அழைத்துச் சென்று மிரட்டி தங்க நகையை பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ஆகாஷ்ராஜ் (18). இவா், ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வருகிறாா். ஆகாஷ்ராஜ், திங்கள்கிழமை தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற போது ராமபுரம் பகுதியில் விபத்தில் சிக்கினாா்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த இரு நபா்கள், ஆகாஷ்ராஜை தங்களது மோட்டாா் சைக்கிளில் ஏறுமாறும் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் எனவும் கூறி அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால் அந்த நபா்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக, ராமாபுரம் பூதப்பேடு பகுதியில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு ஆகாஷ்ராஜை அழைத்துச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கநகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

அங்கு காயங்களுடன் தவித்த ஆகாஷ்ராஜை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்கு பின்னா் ஆகாஷ்ராஜ், ராமாபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி குறித்து புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.