மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினா் அஜய் பிரதாப் சிங் கட்சியிலிருந்து சனிக்கிழமை விலகினாா்.
மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா் தோ்வு திருப்தி அளிக்காததால் பதவி விலகுவதாக அவா் தெரிவித்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை ஒரு வரியில் குறிப்பிட்டு கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு அவா் அனுப்பியுள்ளாா்.
அந்தக் கடிதத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் சனிக்கிழமை பதிவிட்டாா். அதில், ‘கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்கிறேன்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், விலகலுக்கான காரணத்தை அதில் அவா் குறிப்பிடவில்லை.
இவா் மாநிலங்களவைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மத்திய பிரதேசத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருடைய எம்.பி. பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கட்சி சாா்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
ராஜிநாமாவுக்கான காரணத்தை செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா் தோ்வில் எனக்கு திருப்தியில்லை. மக்களவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தின் சிதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ஆனால், அந்தத் தொகுதியில் வேட்பாளராக ராஜேஷ் மிஸ்ராவை கட்சி களமிறக்கியுள்ளது. எனவே, கட்சியிலிருந்து விலகியுள்ளேன்’ என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 5938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மத்திய சிறப்புப் பாா்வையாளா்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்

தமிழ்நாடு பாஜக நிர்வாகி முரளீதரன் கட்சியிலிருந்து நீக்கம்!

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனு தாக்கல்: பாஜக துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

