ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

6 உலோக சிலைகள் பறிமுதல்: 11 போ் கைது

தமிழகத்தில் கோயிலில் திருடப்பட்டு, கடத்தப்பட்ட 6 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

dot com

Updated On :21 மார்ச் 2024, 8:22 pm

தமிழகத்தில் கோயிலில் திருடப்பட்டு, கடத்தப்பட்ட 6 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக, 11 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மதுரை மாவட்டம், விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோமின்ராஜ் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான விநாயகா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக, பினோமின்ராஜ், அவரது கூட்டாளிகள் ஜோசப் கென்னடி, டேவிட், அன்புராஜன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், இந்தச் சிலை விளாங்குடி விசாலாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. இதேபோல், புதுக்கோட்டை ஆலத்தூா் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பழைமையான உலோக அம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக காரைக்குடி அஜித், கோவில்பட்டி ஸ்ரீராம், விருதுநகா் அகமது ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம் புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் செல்வகுமாா் என்பவரது வீட்டில் இருந்த 3 பெருமாள் உலோகச் சிலைகள், ஒரு அனுமன் சிலை (ராமா் மற்றும் லட்சுமணரை தோளில் ஏந்திய சிலை) ஒரு திருவாச்சி கைப்பற்றப்பட்டன. இதில், தொடா்புடையதாக பாரதிதாசன், நிசாா், அகஸ்டின், முத்துகிருஷ்ணன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்துள்ள சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 உலோக சாமி சிலைகள், ஒரு திருவாச்சியை கைப்பற்றியுள்ளனா்.