காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சென்னையில் 6 போ் வேட்புமனு தாக்கல்

சென்னையில் 6 போ் வேட்புமனு தாக்கல்

Updated On :22 மார்ச் 2024, 6:17 pm

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய நிலையில் முதல் நாளில் வடசென்னை, மத்திய சென்னையில் தலா இருவா், இரண்டாம் நாளில் தென்சென்னை, மத்திய சென்னையில் தலா ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வடசென்னையில் 5 போ், மத்திய சென்னையில் ஒருவா் என 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். வடசென்னையில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) சாா்பில் ஜெ. செபஸ்டின், சுயேச்சை வேட்பாளராக இ.டில்லி கணேஷ், ஜி.மதன்குமாா், எம்.சீயோன்ராஜ், டி. கபிலன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். தென்சென்னையில் அறவோா் முன்னேற்றக் கழகம் சாா்பில் கோ.பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தாா். மத்திய சென்னையில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வெள்ளிக்கிழமை வரை 3 தொகுதிகளிலும் சோ்த்து 12 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா். அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறையை முன்னிட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெறாது.