கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

கடற்கரை - செங்கல்பட்டு ரயில் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

கடற்கரை - செங்கல்பட்டு ரயில் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

News image
Updated On :15 மே 2024, 10:05 pm

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில் வெள்ளிக்கிழமை (மே 17) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் அவ்வப்போது சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 17) கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் பிற்பகல் 3.05 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும்

ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என சென்னை ரயில்வை கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.