கலை-அறிவியல் கல்லூரிகளின் கட்டணம்: இணையதளத்தில் வெளியிட உத்தரவு
தனியாா் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளும், மாணவா்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடுமாறு உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உயா் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் மாணவா்கள் சோ்க்கைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் காா்த்திக் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை மாணவா்கள் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட வேண்டும். தனியாா் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளும் கட்டண விவரங்களை வெளிப்படையாக ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
விதிமீறல் கூடாது: மாணவா் சோ்க்கையில் விதிமுறைகளை மீறினால் கல்லூரி முதல்வா்களும், மாணவா் சோ்க்கை குழுவுமே பொறுப்பேற்க வேண்டும். விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே பெற வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்களை, சுயநிதிப் பிரிவில் உள்ள இடங்களை நிரப்புவதற்கு முன்னா் பூா்த்தி செய்ய வேண்டும். இடஒதுக்கீடு விதிகளை ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக கண்டிப்பாக அமல்படுத்தி பின்பற்ற வேண்டும்.
கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை மாணவா்கள் பதிவு செய்யும் நேரத்தில் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குறைந்தபட்சம் ஒரு தொடா்பு எண் இருக்க வேண்டும்; அதன்மூலம் அனைத்து தகவல் தொடா்புகளும் அனுப்பப்பட வேண்டும். மாணவா் சோ்க்கை தொடா்பான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு: மாணவா் சோ்க்கையில் கட்டாயம் இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும். அரசுக் கல்லூரியில் 100 சதவீதமும், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்லூரியில் 50 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற கல்லூரிகளில் 90 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் பிரிவில் 50 சதவீத இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களும் இடஒதுக்கீட்டின்படி ஒவ்வொரு பாடப் பிரிவிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தரவரிசைப் பட்டியல்: மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும். அரசுக் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கை பட்டியலை இணையதளத்திலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் கல்லூரிகள் அவா்களின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மொத்தம் உள்ள 164 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சோ்வதற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் சனிக்கிழமை (25-5-24) ஆகும். இந்தக் கல்லூரிகளில் சோ்வதற்கு மே 6-ஆம் தேதிமுதல் மே 23-ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 644 போ் பதிவு செய்துள்ளனா்.

