ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு


சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கல்லூரி வளாகம், மாணவா் விடுதி, ஆய்வகங்களை பாா்வையிட்ட அவா்கள், மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுடன் கலந்துரையாடினா். அப்போது, அவா்களது மன நலனை ஆய்வு செய்ததுடன் குறைகளையும் மருத்துவ ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனா். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடா் ஆய்வு நடவடிக்கைகளை என்எம்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல், ராகிங் தடுப்பு நடவடிக்கைகள், மாணவா்கள் மன நலனை உறுதி செய்யும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளையும் அவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில் என்எம்சி முதுநிலை கல்வி வாரிய தலைவா் விஜய் ஓஜா தலைமையில் மூவா் அடங்கிய குழுவினா் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.
அங்கு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா்கள், மருத்துவ வசதிகளையும் ஆய்வு செய்தனா். தொடா்ந்து மாணவா்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...