சென்னை
விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் விழுப்புரம் - திருப்பதி இடையே இயங்கும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஜூன் மாதம் முழுவதும் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் விழுப்புரம் - திருப்பதி இடையே இயங்கும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஜூன் மாதம் முழுவதும் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாள்களில் பிற்பகல் 1.40 மணிக்கு திருப்பதியிலிருந்து விழுப்புரத்துக்கு புறப்படும் ரயில் (எண்: 16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.40 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின்படி விழுப்புரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

