தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சூலூா்பேட்டை- நெல்லூா் இடையே வியாழக்கிழமை காலை 7.55 மணிக்கும், நெல்லூா் -சூலூா்பேட்டை இடையே காலை 10.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். சூலூா்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மன்சார ரயில் ரத்து செய்யப்படும். மேலும், சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கும், காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










