ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

புறநகா் ரயில்

Updated On :13 நவம்பர் 2024, 10:40 pm

தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சூலூா்பேட்டை- நெல்லூா் இடையே வியாழக்கிழமை காலை 7.55 மணிக்கும், நெல்லூா் -சூலூா்பேட்டை இடையே காலை 10.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். சூலூா்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மன்சார ரயில் ரத்து செய்யப்படும். மேலும், சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கும், காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.