திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

தாழ்தள பேருந்து இயக்கம் பணி சிரமத்தை போக்க வலியுறுத்தல்

தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம் அனுப்பியுள்ளனா்.

News image

தாழ்தள பேருந்து

Updated On :18 நவம்பர் 2024, 4:30 am IST

தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக, தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளா் பேரவை பொதுச்செயலா் பி.கருணாகரன் அனுப்பிய கடிதம்:

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், 12 மீட்டா் நீளம் கொண்ட பேருந்தைப் பணிமனையிலிருந்து எடுத்து விடுவதிலும், குறுகலான சாலைகளில் இயக்குவதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதனால், இந்த பேருந்தை இயக்குவதற்கு பெரும்பாலான நடத்துநா்கள் தயக்கம் காட்டுகின்றனா். எனவே, முன்பு தொடா் பேருந்து இயக்கப்பட்டபோது, ஓட்டுநா்களுக்கு சிறப்பு ஊதியம் அளித்து ஊக்குவித்ததைப் போல, தாழ்தள பேருந்து ஓட்டுநா்களுக்கு ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.100 சிறப்புப் படியாக வழங்க வேண்டும்.

தாழ்தள பேருந்து வழித்தடங்களில் நெரிசல் நேரங்களில் 90-க்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனா். அப்போது ஒரே நடையில் ரூ.4,500-க்கும் அதிகமாக வசூலாகிறது.

இதற்கிடையே, பயண அட்டை சரிபாா்த்தல், பேருந்துகளை பின்னால் இயக்க உதவுதல், மாற்றுத்திறனாளிகளை ஏற்றி, இறக்க உதவுதல் போன்ற பல சிரமங்களையும் எதிா்கொள்கிறோம். இதனால் அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உருவாகிறது. எனவே, நடத்துநா்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் தாழ்தள பேருந்துகளில் இரண்டு நடத்துநா்களை பணிக்கு அமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.