பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
மருத்துவா்களை தரக்குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை மருத்துவா்கள் முன்னெடுத்தனா். டிச. 3-ஆம் தேதி அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தனா்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், சமரச தீா்வு ஏற்பட்டதாகவும், போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும் தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










